மரங்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் பணியில் மீட்கப்பட்ட 26 வது மரம் "அரசமரம்"


கோவை - பொள்ளாச்சி சாலையை விரிவுபடுத்தும் திட்டத்தை விரைவில் தொடங்க நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்துள்ளது. அதற்கு சாலை ஓரங்களில் உள்ள மரங்களை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களான ஓசை, சிறுதுளி, குறிச்சிக்குளம்  பாதுகாப்பு இயக்கம், பசுமை தேசம், ராக் அமைப்பு ஆகிய தன்னார்வ அமைப்புகள் இனைந்து மரங்களுக்கு மறுவாழ்வுப் பணியை மேற்கொண்டனர்.  இதன்மூலம் சாலை ஓரங்களில் உள்ள 25திற்கும் மேற்பட்ட மரங்களை மாற்று இடத்தில் நடப்பட்டுள்ளது. 



இந்நிலையில், பொள்ளாச்சி சாலையில் வெட்டப்படவிருந்த மரத்திற்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் 26வது மரமாக அரசமரத்திற்கு மறுநடவு செய்யும் பணிகள் நேற்று காலை 8 மணி அளவில் துவங்கி, மாலை 5 மணிக்கு அரசமரம் மறுநடவு செய்யும் பணி நிறைபெற்றது. ஜே.சி.பி இயந்திரத்தின் மூலம் வேருடன் அகற்றப்பட்ட இந்த மரத்தை வாகனத்தில் சுமார் 17 கிலோமீட்டர் தொலைவில் கொண்டு செல்லப்பட்டு செட்டிபாளையம் பகுதியில் உள்ள ஃபைர்பேர்டு இன்ஸ்டிடியூடில் நடப்பட்டது. 



மரம் மீட்கப்படும் இடம் :-குறிச்சிக்குளம் அருகில் பொள்ளாச்சி சாலை.

மீட்கப்படும் மரம் :- அரசமரம்.

மரத்தின் வயது:- 45 வருடங்கள்.

மரத்தை மறுநடவு செய்யப்படும் இடம்:- ஃபைர்பேர்டு இன்ஸ்டிடியூட் செட்டிபாளையம்.



Newsletter

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான மண்டல அலுவலர்கள் பயிற்சி நிகழ்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக 10 தொகுதிகளுக்கான 366 மண்டல அலுவலர்கள் மற்றும் உதவி மண்டல அலுவலர்க...

T20 உலகக்கோப்பை வீரர் சஞ்சு சாம்சன் கோவை ADISSIA நிறுவனத்தின் Brand Ambassador ஆனார்

T20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றிய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன், கோவையைச் சேர...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் DST-FIST ஆதரவுடன் ₹1 கோடி மதிப்பில் ஆராய்ச்சி உள்கட்டமைப்பு வலுப்படுத்தல்

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் மார்ச் 25, 2026 அன்று DST-FIST நிதியுதவியுடன் ₹1 கோடி மதி...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து 'கலைத் தாரகை' விருது வழங்கும் விழா

கோவை ஈச்சனாரியில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து விருது வழங்கும் விழா நடை...

பள்ளபாளையத்தில் புதிய ஆட்டோமொபைல் கடையினை திறந்து வைத்தார் திமுக கழக செயலாளர் முருகேசன்

கோவை தெற்கு மாவட்டம் பள்ளபாளையம் பேரூராட்சி பாப்புலர் கார்டன் பகுதியில் அமைந்துள்ள புதிய ஆட்டோமொபைல் கடையினை திமுக கழக ச...

கோவையில் செல்போனில் பேசியபடி நடந்த இளைஞர் இரண்டாவது மாடியில் இருந்து விழுந்து பலி

கோவை வடவள்ளியில் மனைவியுடன் செல்போனில் பேசியபடி மாடிக்கு நடந்து சென்ற ஜேசிபி ஆபரேட்டர் விவேக் (33) இரண்டாவது மாடியில் இர...